12/03/2023
Looking for new home 🏘️ golden retriever show quality papper
Reasonable price all 1st quality . 1st quality
Looking for new home 🏘️ golden retriever show quality papper
Golden Retriever stud need in chennai cengalpattu.certificate feamal ( proven male dog need)..
Stud Male need 8838015372.whatsapp me photo urgent
Sales Dharmapuri contact 9952466813.8 chicks and 3 5 month females Sales all killi mukku .1st quality.
https://youtu.be/PNPCjoWLPG8
http://www.facebook.com/Sakshi-pets-102406852117454/
https://wa.me/918838015372
கால்நடைகளின் பசுந்தீவனமான அசோலா- இயற்கை முறையில் வளர்ப்பது எப்படி?
கால்நடை விவசாயிகளுக்கு அதிக செலவு பிடிக்கக்கூடியது என்றால், அது தரமானத் தீவனங்கள்தான். இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமைவதுடன், கூடுதல் வருமானம் ஈட்டித் தருவதிலும் முக்கிய இடம் வகிப்பது அசோலா.
ஏனெனில், ஒரு கிலோ அசோலா ஒரு கிலோ புண்ணாக்கிற்கு சமமானதாகும். இத்தீவனத்தை அளிப்பதால்,கால்நடைகளின் பால் உற்பத்தி 15-20 சதவீதம் அதிகரிக்கிறது.
இதனால் அசோலாவை ஆடு, கோழி, முயல், வாத்து மற்றும் பால் உற்பத்தி மாடு, எருமைகளுக்கும் தீவனமாக அளிக்கலாம் என்பதே கால்நடைத்துறையினரின் அறிவுரை. எனவே அசோலாவை இயற்கை உரங்களைக் கொண்டு எவ்வாறு எளிமையான முறையில் வளர்ப்பது என்பது குறித்துப் பார்ப்போம்.
அலோசா (Azolla)
அசோலா என்பது பெரணி வகையை சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம். இதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, சுண்ணாம்புச்சத்து, கந்தகம், மக்னீசியம், இரும்புச்சத்துகள் என பெரும்பாலான சத்துக்கள் அடங்கியுள்ளன.
இடம்தேர்வு
மர நிழலான இடத்தைத் தேர்வு செய்து அதன் அடியில் ஒன்றரை அடி உயரம், மூன்றரை அடி அகலம், 10 அடி நீளம் கொண்ட சிமெண்ட் தொட்டியை அமைக்க வேண்டும். தொட்டி 10 சென்டி மீட்டர் அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதில், மாமரம் மற்றும் புளியமரத்தைக் கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும்.
How to grow Azolla
தரமான விதைகள் (Quality Seeds)
நன்கு பூச்சித்தாக்குதல் இல்லாதத் தரமான தாய் விதைகளை எடுத்து, 2 முறை தண்ணீர் விட்டு அலசிவிட வேண்டும். ஏனெனில், அதில் ஒட்டுண்ணிகளின் முட்டை இருந்தால், அவை கால்நடைகளுக்கு நோய்களைக் கொண்டுவரும்.
இடுபொருட்கள் (Ingredients)
நிலத்தின் மண் - 20 கிலோ
மக்கிய தொழுஉரம் - 2 கிலோ
அல்லது
மண்புழு உரம் - 2கிலோ
புதிய சாணம் - 500 கிராம்
முருங்கைக் கீரை - 500 கிராம்
வேப்பிலை - 500 கிராம்
பாறைத்தூள் - 2 கிலோ
அல்லது
வாழைப்பழம் - 4
அசோலா உற்பத்தி (Cultivation)
மர நிழல் உள்ள சுத்தமான, சமமான இடத்தில், செங்கல்களை பக்கவாட்டில் அடுக்கி 2 மீ X 2 மீ அளவுள்ள தொட்டி போல் அமைத்து கொள்ளவேண்டும். புல் மற்றும் மர வேர்களின் வளர்ச்சியை அசோலா குழியினில் தடுக்க தொட்டியின் கீழே உர சாக்கினை பரப்பி விட வேண்டும்.
அதன் மேல் சில்பாலின் பாயை ஒரே சீராக பரப்பிவிட வேண்டும்.
சில்பாலின் பாயின் மீது நிலத்தின் மண் , தொழு உரம் ஆகியவற்றை இடவேண்டும். பின்னர் சாணியை நன்கு கரைத்து சக்கையை அகற்றிவிட்டு சாணிக்கரைசலை ஊற்றவும்.
முருங்கைக்கீரை, வேப்பிலை, பாறைத்தூள் அல்லது வாழைப்பழம் ஆகியவற்றைத் தொட்டியில் போட்டு நன்கு கலக்கிவிடவும்.
அதன் பிறகு அசோலா விதைகளைப்போட்டு தண்ணீர் தெளிக்கவும்.
15 நாட்களுக்கு ஒருமுறை முருங்கைக்கீரை, வேப்பிலை, பாறைத்தூள் அல்லது வாழைப்பழத்தைக் கலந்து போடவும்.
மாதத்திற்கு ஒருமுறை தொழுஉரம் அல்லது மண்புழு உரத்தையும் போடவேண்டும்.
மாதத்திற்கு ஒருமுறை தண்ணீரை மாற்றி விடவேண்டும்.
தண்ணீரை 10 செ.மீ. உயரம் வரை ஊற்ற வேண்டும்.
ஒரு வாரத்தில் அசோலா நன்றாக வளர்ந்து தொட்டி முழுவதும் பரவி இருக்கும்.
இப்படி வளர்க்கும் அசோலா 6 மாதம் வரை நன்றாக இருக்கும்.
6 மாதங்களுக்கு பிறகு தொட்டியைச் சுத்தம் செய்துவிட்ட, திரும்ப அடுத்தகட்ட அசோலா வளர்ப்புக்குத் தயாராகிவிடலாம்.
மகசூல் (Yield)
விதைத்த மூன்று நாட்களில், எடை மூன்று மடங்காக பெருகும். 15 நாட்களில், பசுந்தீவனமாக பயன்படுத்த அசோலா தாவரம் தயாராகி விடும்.
அறுவடை (Harvesting)
நாளொன்றுக்கு அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை அறுவடை செய்யலாம்.
அசோலா பசுந்தீவனம் 15 நாட்களில் நல்ல வளர்ச்சி அடைந்து விடும். அசோலாவை சுத்தமான தண்ணீரில் அலசினால் சாணத்தின் வாசனை இல்லாமல் இருக்கும்.
சல்லடை கொண்டு அலசும்போது கிடைக்கும் நீரில் உள்ள சின்ன சின்ன அசோலா நாற்றுகளை திரும்ப தொட்டியில் ஊற்றலாம்.
subscribe my channel like and share comment. அடுத்த பதிவில் புதிய விற்பனை கோழி சேவல் வீடியோ வெளியிடப்படும்.This breed chick available in after 30 days. இந்த ...
Parrot nose aseel breeds buying and selling .
கிளிமூக்கு கோழி குஞ்சுகள் கோழிகள் வாங்க விற்க கீழே உள்ள வாட்ஸ்அப் எனக்கு தொடர்பு கொள்ளவும் .
https://wa.me/918838015372
://www.facebook.com/Sakshi-pets-102406852117454/
குடற்புழுநீக்க மருந்து தயாரித்தல்
தேவையான பொருட்கள்
ஆகாசக் கருடன் கிழங்கு - 500 கிராம்
சோற்றுக்கற்றாழை - 500 கிராம்
குப்பை மேனி இலை - 500 கிராம்
பூண்டு - 250 கிராம்
கருஞ்சீரகம் -25 கிராம்
மஞ்சள் தூள் -100 கிராம்
வேப்பயிலை - 500 கிராம்
சீரகம் - 50 கிராம்
சின்னவெங்காயம் - 250 கிராம்
மிளகு - 50 கிராம்
செய்முறை :
சீரகம், மிளகு, கருஞ்சீரகம் இவை மூன்றையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும். மஞ்சள் தவிர்த்து மற்ற பொருட்கள் அனைத்தையும் அரைத்துக்கொள்ளவும். அரைத்த கலவையுடன், மஞ்சள் மற்றும் பொடி செய்தக் கலவையை ஒன்றாகக் கலந்து சிறு சிறு உருண்டைகளாக மாற்றி, கோழிகளுக்கு காலைத் தீவனத்திற்கு முன்பே கொடுக்கவும். அல்லது காலைத் தீவனத்துடன் கலந்து கொடுக்கவும். இந்த மருந்தைக் கோழிகளுக்கு கொடுத்துவந்தால், குடற்புழுக்கள் வெளியே வந்துவிடும்.
இதனை 200 பெரிய கோழிகளுக்கும், 400 வளர் இளம்கோழிகளுக்கும் கொடுக்கலாம். இந்த மருந்தைத் தயாரித்த 5 மணி நேரத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும் என்பது, கால்நடை விவசாயிகள் கவனத்தில் கொள்ளவேண்டியது.
https://youtu.be/PNPCjoWLPG8
https://www.facebook.com/Sakshi-pets-102406852117454/
மழைக்காலத்தில் நாட்டுக் கோழிகளைத் தாக்கும் நோய்கள்- எளிய தடுப்பு முறைகள்!
மழைக்காலம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும் பலவித நோய்களைக் கொண்டுவருகிறது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு கால்நடை விவசாயிகள் கூடுதல் விழிப்போடு செயல்பட்டால், நோய்களைக் கட்டுப்படுத்துவதோடு, தங்கள் பொருளாதார இழப்பையும் தடுக்கலாம்.
மழைக்காலங்களில் நாட்டுக் கோழிகளைத் தாக்கும் நோய்கள் என்று ஆராய்ந்தால், 5 நோய்கள் முக்கியமானவை. அவை
வெள்ளைக் கழிச்சல்
சளி மற்றும் சுவாசக் கோளாறு
வாத நோய்
கோழிக்காய்ச்சல்
தோல் முட்டை இடுதல்
இந்த நோய்கள் வருவதற்கு முக்கியக் காரணம் குடற்புழுக்கள்தான். எனவே தாய் கோழிக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறையும், 6 மாதத்திற்கு உட்பட்ட வளரும் இளம்கோழிகளுக்கு மாதத்திற்கு ஒருமுறையும் குடற்புழு நீக்க மருந்து அளிப்பது நல்லது. அந்த மருந்தும் ரசாயனக் கலப்பு இல்லாமல் இயற்கையான முறையில் தயாரித்ததாக இருப்பது சிறந்தது.
அடுத்து வரும் பதிவில் குடல்புழு நீக்கம் மட்டும் செய்முறை விளக்கம் பற்றி தருகிறேன் கிளி மூக்கு சேவல் வளர்க்கும் தர்மபுரி பிரபு.
https://www.facebook.com/Sakshi-pets-102406852117454/
https://youtu.be/PNPCjoWLPG8
தடுப்பூசி அட்டவணை (Vaccination)
5 முதல் 7 நாள் ஆன கோழிக்குஞ்சிற்கு இராணிக்கெட் தடுப்பூசியை ஒன்று அல்லது இரண்டு சொட்டு கொடுக்க வேண்டும். இந்தத் தடுப்பூசியை கண் அல்லது நாசித்துவாரத்தில் செலுத்த வேண்டும்.
28 ம் நாள் அதாவது 4 வாரங்கள் ஆன கோழிக்குஞ்சிற்கு இராணிக்கெட் தப்பூசியை(லசோட்டா) ஒன்று அல்லது இரண்டு சொட்டு, குடிநீரிலோ அல்லது நாசித்துவாரத்தில் செலுத்த வேண்டும்.
42ம் நாள், அதாவது 6 வாரங்கள் ஆனக் கோழிக்குஞ்சிற்கு கோழி அம்மைத் தடுப்பூசியை தசையில் 0.5 மில்லி அளவுக்கு செலுத்த வேண்டும்.
56ம் நாள் அதாவது 8 வாரங்கள் ஆன கோழிக் குஞ்சிற்கு இராணிக்கெட்(ஆர்.டீ.வி.கே. அல்லது ஆர்2 பி) தடுப்பூசியை இறக்கையில் தோலுக்குஅடியில் ஊசி மூலம் 0.5 மில்லி அளவுக்கு செலுத்த வேண்டும்.
குறைந்த செலவில் நிறைந்த லாபம் ஈட்டும் தொழிலில் ஒன்றாகத் திகழ்வது கோழி வளர்ப்பு. குறிப்பாக கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த தொழிலில் உள்ள சவாலான பணி எதுவென்றால், கோழிக்குஞ்சுகளைப் பராமரிப்பதுதான்.
மஞ்சள் சீரக மருந்து
அவ்வாறு பராமரிப்பதற்கான வழிமுறைகள் பற்றிப் பார்ப்போம். முதல் இரண்டு வாரம் ஆன கோழிக்குஞ்சுகளுக்கு மஞ்சள் சீரக மருந்து தர வேண்டும்.
தயாரிக்கும் முறை
சீரகம் - 10 கிராம்
மஞ்சள் - 5 கிராம்
தண்ணீர் - 1.5 லிட்டர்
கொதிக்க வைத்து 1 லிட்டராக்க வேண்டும்
இரண்டு வாரத்திற்கு பிறகு வாரம் ஒரு முறையும், ஒரு மாதத்திற்கு பிறகு
வேப்ப இலை, முருங்கை இலை ஆகியவற்றையும் கொடுக்கலாம்.
குடற் புழு நீக்கம் (Deworming)
45 (ம) 90ம் நாளில் 2 லிட்டர் தண்ணீரில் 250 கிராம் கற்றாழையைக் கலந்து கொடுக்க வேண்டும். இதனைக் கடைப்பிடித்தால், எளிதில் குடற்புழுக்களை நீக்கம் செய்ய முடியும்.
1st top quality .
Be the first to know and let us send you an email when Sakshi pets posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to Sakshi pets:
Want your business to be the top-listed Pet Store/pet Service?