Rabbit Farm Jaffna
- Home
- Sri Lanka
- Chavakachcheri
- Rabbit Farm Jaffna
Rabbit Sales
29/06/2022
🐇🐇🐇🐇
26/06/2022
Sales
0777580723
16/06/2022
27/02/2022
யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய முயல்பண்ணை/Jaffna Largest Rabbit Farm/srilankanabi/srilankanboyabiகைதடியில் உள்ள முயல் பண்ணை உரிமையாளர் பெயர் பிரசா.....
23/02/2022
தாய் முயல் இறந்தால் குட்டியை காப்பாற்றும் முறை🐇🐇🐇
19/02/2022
13/12/2021
Rabbit
06/12/2021
குட்டி போடக்கூடிய நிலையில் உள்ளது
0771613577
19/11/2021
விவசாயிகள் பூச்சிக்கொல்லிக்காக செலவழிக்கும் பணத்தை வெண்மையான ஈக்கள், காய்கறிகள், காபி, மக்காடமியா, வாழைப்பழங்கள் மற்றும் வெண்ணெய் போன்ற பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை உறிஞ்சுவதற்கு முயல் சிறுநீரைப் பயன்படுத்துவதன் மூலம் குறைக்க முடியும்.
அதை எவ்வாறு பயன்படுத்துவது
முயல் சிறுநீரை இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்; ஒரு இலை உரமாகவும், பூச்சிக்கொல்லி அல்லது பூச்சிக்கொல்லியாகவும்.
ஒரு பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தும்போது, ஒரு விவசாயி இரண்டு லிட்டர் செறிவூட்டப்பட்ட முயல் சிறுநீரை மூன்று லிட்டர் தண்ணீரில் கலந்து, பூச்சிகளைத் துடைக்க ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் மூன்று முறை கழித்து கலவையை பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தெளிக்க வேண்டும்.
ஒரு ஃபோலியாவாகப் பயன்படுத்தும்போது, ஒரு லிட்டர் செறிவூட்டப்பட்ட முயல் சிறுநீரைப் பயன்படுத்த வேண்டும், அதை நான்கு லிட்டர் தண்ணீரில் கலந்து இரண்டு வாரங்களுக்கு மூன்று முறை பயிர்களுக்குப் பயன்படுத்த வேண்டும்.
முயல் சிறுநீரைத் தவிர, இயற்கையாக தயாரிக்கப்பட்ட வேப்ப எண்ணெயைப் பயன்படுத்தி வெள்ளைப்பூக்களையும் அழிக்க முடியும்.
"முயல் சிறுநீர் பல பூச்சிகளை விரட்டக்கூடும்,"
செயல்முறை
உரத்தைப் பயன்படுத்த, ஒருவர் அதை 200 மில்லி முயல் சிறுநீரின் விகிதத்தில் 20 லிட்டர் தண்ணீருக்கு தண்ணீரில் கலக்கிறார். இது ஒரு ஏக்கர் நிலத்தை தெளிக்க முடியும். கலவையை ஒரு பம்பில் போட்டு பயிர்கள் மீது தெளிக்க வேண்டும். ஸ்டோமாட்டா திறந்திருக்கும் போது இது அதிகாலை மற்றும் மாலை தாமதமாக தெளிப்பு செய்யப்பட வேண்டும். இலைகள் நேரடியாக உரத்தில் எடுக்கும், மீதமுள்ளவை மண்ணால் உறிஞ்சப்படும்.
"இது ஒரு ஃபோலியார் தீவனம் என்பதால், தெளித்தல் வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களில் செய்யப்பட வேண்டும். உதாரணமாக, பழங்களில், இது முளைத்தல், வண்ணமயமாக்கல் மற்றும் பூக்கும் கட்டங்களில் செய்யப்பட வேண்டும்.
26/10/2021
யார் யார் எல்லாம் முயல் பண்ணை வைக்கலாம் :
1. முயல்களின் மீது ஆர்வம் இருத்தல் வேண்டும்
2. உழைக்க வேண்டும்
3. பொறுமையாக இருத்தல் வேண்டும்
முயல் பண்ணை வைக்க என்ன என்னவெல்லாம் இருக்க வேண்டும்
1. முயலை வைக்க சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ இடம் இருத்தல் வேண்டும்
2. முயலுக்கு பசுந்தீவனம் எளிதாக தினமும் கிடைத்தல் வேண்டும்
மேற்கூறிய இரண்டில் எதாவது ஒன்று பணம் செலவில்லாமல் இருத்தல் வேண்டும்...... சொந்தமாக இடம் மற்றும் பசுந்தீவனம் தயாரிப்பு செய்ய இடம் இருந்தால் மிகவும் நல்லது.....
ஆரம்ப நிலையில் என்ன என்ன முயல் வாங்கலாம்
முதலில் எதற்காக வளர்க்க போகிறீர்கள் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்
1. கறிக்காகவா அல்லது வளர்ப்புக்கா என்று முடிவு செய்யுங்கள்
2. கறிக்கு என்றால் தூய இன முயல்கள் வாங்கவும் ( high breed)
3. வளர்ப்பு கொடுக்க போகிறேன் என்றால் நாட்டு முயல் அல்லது கலப்பின முயல் வாங்கலாம்.....
ஆரம்ப நிலையில் எத்தனை முயல்களை வாங்கலாம்
1. ஒரு ஜோடி முயல் குட்டிகள் வாங்கி வளர்த்து அதில் இருந்து குட்டிகளை எடுங்கள்......
2. அனுபவம் கிடைத்த பிறகு ஒரு யூனிட் வாங்குங்கள்......ஒரு யூனிட் என்றால் 7 பெண் மற்றும் 3 ஆண் முயல்கள் ஆகும்.....
3. ஒரு யூனிட் 3 மாத முயல்களாக வெவ்வேறு இன முயல்களை வாங்குங்கள்.....ஏன் 3 மாத முயல்கள் என்றால் உங்கள் பகுதி சூழ்நிலை மற்றும் உங்கள் பசுந்தீவனம் ஏற்றார் போல் நன்கு வளரும்.....
4. 3 மாத முயலாக வாங்கி வளர்த்து பின்னர் விற்பனை செய்தாலும் நஷ்டம் இல்லாமல் விற்க முடியும்.....
பண்ணையின் வெற்றி
1. குட்டிகளை இறப்பில்லாமல் வளர்ப்பதே பண்ணையின் வளர்ச்சி மற்றும் பண்ணையின் வெற்றி......
2. குட்டி இறப்பில்லாமல் இருக்க தாய் முயல் மற்றும் இனச்சேர்க்கை செய்யப்படும் ஆண் முயல் தரமாக இருத்தல் வேண்டும்......
3.நன்றாக அடர்தீவனம் மற்றும் பசுந்தீவனம் கொடுக்க வேண்டும்
4. பசுந்தீவனம் மாற்றி மாற்றி போட வேண்டும்.ஏனென்றால் அப்பொழுது தான் எல்லா வகையான சத்துக்களும் கிடைக்கும்......
தாய் முயல் பராமரிப்பு
1.தாய் முயலை நன்றாக உணவு அளித்தல் வேண்டும்......
2. குட்டி ஈன்ற உடனே இனச்சேர்க்கைக்கு விடாமல் ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாத இடைவெளி விட்டு விடலாம்......(இயந்திரம் இல்லை அதுவும் உயிர் தான்)
3. இனச்சேர்க்கை விட்ட தேதி குறித்து விட வேண்டும் பிறகு 15 நாட்களுக்கு பிறகு இனச்சேர்க்கைக்கு விட்டு சினை என்று உறுதி செய்யுங்கள்.( கத்தி கொண்டு ஓடும்)
4.தண்ணீர் அதிகமாக எடுத்துக் கொள்ளும்.
5. குட்டி ஈன்ற பிறகு அடர்தீவனம் மற்றும் பசுந்தீவனம் கொஞ்சம் அதிகரியுங்கள்.
6.நோயின்றி நன்கு எடை நிறைந்த ஆரோக்கியமான முயல்களை இனச்சேர்க்கை செய்யுங்கள்.
ஆண் முயல் பராமரிப்பு
1. ஒரு பண்ணையின் வளர்ச்சி பெறுவதற்கு முக்கிய பங்கு ஆண் முயல் தான்.....
2.இனச்சேர்க்கைக்கு விடும் முன்பு சுண்டல்( கொண்டகடலை) கொடுக்கலாம்..
3. ஒரு நாளில் ஒரு முறை மட்டும் இனச்சேர்க்கை போதுமானது.பின்பு 2 நாள் அல்லது 1 வாரம் கழித்து இனச்சேர்க்கைக்கு விடுங்கள்.
4.காலை மற்றும் மாலை இரண்டு நேரம் இனச்சேர்க்கைக்கு விடுங்கள்.(அப்பொழுது தான் பொய் சினை இருக்காது)
குட்டிகள் பராமரிப்பு
1. குட்டிகள் 30 நாட்கள் கண்டிப்பாக பால் குடிக்க வேண்டும்.
2.குட்டிகளுக்கு சாப்பிட ஆரம்பிக்கும் அப்பொழுது பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம் தாய் முயலுக்கு வைக்கும் அளவை விட சிறிது அதிகமாக வையுங்கள்.
3. குட்டிகள் தண்ணீர் குடிக்குமாறு வையுங்கள்.
4. குட்டிகள் அதிகமாக சாப்பிட்டால் அஜீரண கோளாறு ஏற்படும்.அதனால் அளவாக கொடுங்கள்.
5. குட்டிகள் பயபடாதவாறு பார்த்து கொள்ளுங்கள்
6.குட்டிகள் கூண்டில் கால் மாட்டி கொள்ளாமல் இருக்க சனல் சாக்கு மற்றும் பச்சை வலைகளை போட்டு பாதுகாப்பாக வையுங்கள்.
பண்ணை பராமரிப்பு
1.சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் எதிர்தகவில் கூரை அமைத்தல் வேண்டும்
2.காற்றோட்டம் இருத்தல் வேண்டும்.( ஒரு புறம் வரக்கூடிய காற்று மறுமுறை போகும் அளவில் இருந்தால் நல்லது)
3.உங்கள் வசதிக்கு ஏற்ப அதிக அளவில் வெயில் மற்றும் அனல் முயலின் மேல் இறங்காமல் இருக்கும் படி கூரை அமைத்தல் வேண்டும் ( கான்கரேட், ஓடு, கூரை, சிமெண்ட் சீட், மெட்டல் சீட்)
3. கூண்டின் அடி பகுதி கடினமாக இருக்கும் படி கூண்டுகளை அமையுங்கள்.
4. கூண்டை தரையில் இருந்து 3 அல்லது 4 அடி மேல் இருக்கும் படி வையுங்கள்
5. ஒரு நாள் கூண்டை சுத்தம் செய்யுங்கள்.மறு நாள் கீழ் உள்ள கழிவுகளை சுத்தம் செய்யுங்கள்.
6. சுத்தமாக வைத்தால் சொறி பிரச்சனைகள் இருந்து முயல்களை தவிர்க்கலாம்
விற்பனை செய்தல்
1. குட்டிகளாக கொடுத்தல்(35 நாட்களில் இருந்து)
2. இனப்பெருக்க முயல்களாக கொடுத்தல்(6 மாதம்)
3. கறிக்கு கொடுத்தல்( 3 மாத லிருந்து 4 மாதம்)
முயல் வளர்ப்பில் எவ்வளவு சம்பாதிக்கலாம்.
உதாரணமாக 1 யூனிட்
7 பெண் மற்றும் 3 ஆண்
26/09/2021
முயல்களுக்கு போடக்கூடிய பசுந்தீவனங்கள்
11/08/2021
11 மாதங்களான டச் முயல் விற்பனைக்கு உண்டு
இடம் திருநெல்வேலி
T.p 077 5782684
04/08/2021
முயல்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொடுக்க வேண்டிய பசுந்தீவனங்கள்
1. துளசி
2.கற்றாழை
3.முருங்கை இலை
4.தோடை இலை
5.கற்பூர வள்ளி இலை
6.வெற்றிலை
30/07/2021
2 மாதங்கள் நிறைவடைந்த முயல் குட்டிகள் விற்பனைக்கு உண்டு
ஆரோக்கியமான முறையில் வளர்க்கப்பட்ட குட்டிகள் விற்பனைக்கு உண்டு
T.p 0777580723
Address
Chavakachcheri
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when Rabbit Farm Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.