Mahesh Kumar T

Mahesh Kumar T Iam what Iam
(2)

30/12/2023
09/06/2023

*🚩💫 🕉 தின காயத்ரி 🕉💫🚩

*💫09/06/2023வெள்ளிக்கிழமை*

**🟡காயத்ரி மந்திரம்*
*************ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்..!*
***
*🟡விநாயகர் காயத்ரி*
*******************ஓம் தத்புருஷாய வித்மஹே*
**வக்ர துண்டாய தீமஹி*
*தந்நோ தந்தி ப்ரசோதயாத்*
******************
*🟡ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி*
* * * * * * * * * * * * * * * * * •
*ஓம் தத்புருஷாய வித்மஹே*
********************மஹா சேநாய தீமஹி*
*தந்நோ சண்முக: ப்ரசோதயாத்*
*******************🕉 ஓம் (குலதெய்வம்) நமஹ*
*🕉 ஓம் (இஷ்டதெய்வம்) நமஹ*
******************
*🟡சூரிய பகவானின் காயத்ரி*
*******************ஓம் பாஸ்கராய வித்மஹே*
**திவாகராய தீமஹி*
*தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்*
******************
*🕉️இன்றைய கிழமை காயத்திரி
*******************🟡சுக்கிரன் காயத்ரி*
***ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
*தனு ஹஸ்தாய தீமஹி
******************தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
*🕉️இன்றைய தின நட்சத்திரம்*
****🟡 அவிட்டம் நட்சத்திரம்:*
*ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்*
***🟡ஸ்ரீ ராமரின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்:*
*ஸ்ரீ ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே*
******************* *ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ*

*🟡ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி மந்திரம்*
******************
*ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே*
********************வாயு புத்ராய தீமஹி*
*தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்*
*******************‌
**🟡நவகிரக மந்திரம்,*

*ஓம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச*
********************குரு(ர்) சுக்ர சனைப்யச்ச ராஹவே கேதவே நமஹ:*

*🔯நோய்களை குணமாக்குவதற்கும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்!*
******************
*🔵தேவாரம்*
*******************மாசில் வீணையும்* *மாலை மதியமும்*
**வீசு தென்றலும்* *வீங்கிள வேனிலும்*
*மூசு வண்டறை* *பொய்கையும் போன்றதே*
********************ஈச னெந்தை யிணையடி நீழலே.*

*🟢முருகப் பெருமானின் மந்திரம்*
******************
*ஓம் பாலசுப்பிரமணிய மஹா தேவி புத்ரா சுவாமி வரவர சுவாஹா!*
******************
*🟣ம்ருத்யுஞ்ச மந்திரம்*
******************
*ஓம் த்ரயம்பகம் யஜாமஹே*
********************ஸீகந்திம் புஷ்டி வர்த்தகம்*
*உர்வாருகமிவ பந்தனான்*
********************ம்ருத்யோர் முக்ஷீய மாம்ரிதாத்*

*💹தன்வந்திரி மந்திரம்*
******************
*ஓம் நமோ பகவதே வாஸுதேவாய*
********************தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய*
*ஸர்வ ஆமய விநாசநாய* *த்ரைலோக்ய நாதாய*
********************ஸ்ரீ மஹா விஷ்ணவே நம!:*

சுமார் 20 வருடங்கள் வாழக்கூடிய ஒரு பசுவினால் கிடைக்கக்கூடிய வருமானமானது ரூ.1,31,40,000/-யை கடந்து செல்லக்கூடும் என்பதனை ...
01/06/2023

சுமார் 20 வருடங்கள் வாழக்கூடிய ஒரு பசுவினால் கிடைக்கக்கூடிய வருமானமானது
ரூ.1,31,40,000/-யை கடந்து செல்லக்கூடும் என்பதனை கண்டு உச்சநீதிமன்றம் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியது.
முக்கிய தீர்ப்புகளின் சிறப்பு அம்சங்கள்.
பசு வதை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வாத பிரதிவாதங்கள் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவை:
மேற்படி வழக்கில் மிகவும் பிரபலமான வழக்கறிஞர்களான சோலி சபர்ஜி (கட்டணம் 20 லட்சம்) ஸ்ரீ கபில்சிபில் (22 லட்சம்) ஸ்ரீ மகேஷ் சத்மாலினி (35 லட்சம்) ஆகியோர் பசு மாமிச வியாபாரிகளின் சார்பாக வாதிட்டனர்.
ஸ்ரீ ராஜீ பாய் அவர்கள் இப்பசு வதையை எதிர்த்து வாதிட வழக்கறிஞரை நியமிக்க தன்னிடம் பணவசதி இல்லையென திரு.ராஜூ பாய் அவர்கள்.
உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பித்ததின் பெயரில் நீதிமன்றமே உங்களுக்கு சட்ட உதவி கொடுத்தால் போதுமா எனக் கேட்க ..
அது தனக்கு மிகவும் மகிழ்ச்சியே,
இருப்பினும் வழக்கை தானே வாதிட அனுமதிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
பின்பு நீதிமன்றம் ஸ்ரீ மெஸ்கிரி என்ற வழக்கறிஞரை இந்த வழக்கில் மனுதாரரான திரு.ராஜூ பாய்க்கு சட்ட உதவி செய்திட நியமித்து வழக்கு தொடரப்பட்டது.
பசு மாமிச வியாபாரிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வாதங்கள் பின்வருவன:
1. பசுவை பாதுகாப்பதனால் எந்த உபயோகமும் இல்லை.
பசு மாமிசத்தை ஏற்றுமதி செய்வதால் இந்திய நாட்டின் பொருளாதார நிலை வலுவடையும்.
2. பசுக்களுக்கு போதுமான வைக்கோல் மற்றும் புற்கள் போன்றவை போதாமல் அவை பசியில் இறப்பதை விட அவற்றை கொல்வதே நல்லது.
3. நமது நாட்டில் மனிதர்களுக்கே இடமில்லை, இதில் என்ன வசதி செய்து தர முடியும்.
4.நமது நாட்டிற்கு வெகுவான அயல் நாட்டு வருமானமானது பசு மாமிச ஏற்றுமதியிலேயே கிடைக்கும்.
5. மாமிசம் சாப்பிடுவது மதரீதியான உரிமை ஆகும்.
இவ்வாறாக பசு மாமிச வியாபாரிகளின் வாதம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களால் வாதிடப்பட்டது.
ராஜு பாயின் பதில் வாதம்:
நல்ல ஆரோக்கியதுடன் இருக்கும் பசுவானது சுமார் 3 முதல் 3.5 குவிண்டால் எடை இருக்கும்.
அதை கொன்றால் சுமார் 70 கிலோ எடை மாமிசம் கிடைக்கும்.
இதை கிலோ ரூ.50 என ஏற்றுமதி செய்வதால் கிடைக்கக்கூடிய தொகை ரூ.3500/-.
பசுவின் இரத்தத்திற்கு கிடைக்கக்கூடிய தொகைரூ. 1500/- முதல் 2000/-.
மேலும் 30 முதல் 35 கிலோ அதன் எலும்புகளுக்கு கிடைக்கக்கூடிய தொகை ரூ.1000/- முதல் 1200/-
ஆக மொத்தத்தில் ஒரு பசுவை வதம் செய்வதனால் ஒரு நாட்டிற்கு அல்லது வியாபாரிக்கு கிடைக்கக்கூடிய தொகை ரூ.7000/-
ஒரு ஆரோக்கியமான பசுவானது ஒரு நாளைக்கு 10 கிலோ சாணம், 3 கிலோ கோமியம் தரக்கூடியதாகும்.
1 கிலோ சாணத்தில் 33 கிலோ உரம் தயாரிக்கலாம்.
இதனை நாம் இயற்கை (சேந்திரியா) உரம் என்போம்.
ஸ்ரீ ராஜூ பாய் அவர்கள் இவ்வாறு வாதிட்டு கொண்டிருக்கும் போது நீதிபதிகள் இது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்பினார்கள்.
அவர் இதை நான் நிரூபிக்க வாய்ப்பு அளிக்கும் படி கேட்டுக்கொண்டதால் நீதிமன்றம் அனுமதி அளித்ததின் பேரில் திரு.ராஜூ பாய் அவர்கள் 1 கிலோ சாணத்தில் 33 கிலோ உரம் தயாரித்து நீதிமன்றத்திற்கு அளித்தார்.
இதனை IRC விஞ்ஞானிகள் பரிசீலித்து மிக உயர்ரக உரமாக அறிவித்தனர்.
இந்த உரமானது பூமிக்கு தேவைப்படுகின்ற மிகவும் சூச்சமமான 18 நன்மைகளை தரக்கூடியது என்றும் தெரிவித்தனர்.
இந்த நன்மைகளானவை பயிர் வளர்ப்புக்கு தேவையான மாங்கனீஸ், பாஸ்பேட், பொட்டாசியம், கால்சியம், அயர்ன், சல்பேட், சிலிகான் போன்றவை உள்ளதாகவும் தெரிவித்தனர்.
சாதாரண ரசாயன உரங்களில் சுமார் 3 ரசாயனங்கள் இருக்கும் என்றும்
இதனால் சாணம் மூலம் தயாராகும் இயற்கை உரத்தில் சாதாரண ரசாயன உரத்தை விட
10 மடங்கு வலிமையுள்ள மதிப்புக்குரியதாகும் என்று திரு. ராஜூ பாய் நிரூபித்து வாதிட்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
திரு. ராஜூ பாய் அவர்கள் நீதிமன்றத்திற்கு ஆட்ச்சேயபனை இல்லையெனில் தங்கள் ஊருக்கு வந்து தானும் தன் குடும்பத்தாரும் பசு சாணம் மற்றும் கோமியம் கொண்டு எவ்வாறு உயர்ந்த ரக உரத்தை தயாரிக்கிறோம் என்று பார்க்கலாம் என்றும் அழைத்தார்.
மேலும் அவருடைய இந்த வாதத்தில் இந்த உரத்தில் 1 கிலோ உரமானது உலக சந்தையில் குறைந்தது ரூ.6/- என்றும் நினைத்தால் ஒரு பசுவானது ஒரு நாளைக்கு ரூ.1800/-லிருந்து ரூ.2000/-வரை வருமானத்தை ஈட்டி தருமென்றும்
(33 கிலோ சாணத்திலிருந்து 330 கிலோ உரம் தயாரித்து அதை ரூ.6/-க்கு மதிப்பிட்டால் (330 x 6) மேலும் மேற்படி பசுக்களுக்கு ஞாயிறு விடுமுறை, அரசு விடுமுறை போன்றவை இல்லை என்பதால் வருடத்திற்க்கு அதாவது 365 நாட்களுமே இதனால் கிடைக்கக்கூடிய வருமானமானது 1800 X 365 = ரூ. 6,57,000/.
இந்த வருமானங்கள் அனைத்தும் மாட்டு சாணத்தால் கிடைக்கக்கூடியவை.
திரு. ராஜூ பாய் அவர்கள் அளித்த இந்த கணக்கின் படி சுமார் 20 வருடங்கள் வாழக்கூடிய ஒரு பசுவினால் கிடைக்கக்கூடிய வருமானமானது ரூ.1,31,40,000/-யை கடந்து செல்லக்கூடும் என்பதனை கண்டு உச்சநீதிமன்றம் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் மக்கள் மாட்டு தொழுவத்தில் லக்ஷ்மி வாசம் செய்வதாக கூறினார்கள் என்று சொன்னால் மேற்படி ஆதாயத்தை வைத்து தான்.
ஆனால் இதனை தொடர்ந்து கேலி செய்பவர்கள் பெரிய படிப்புகளை படித்தவர்களும், பல ஆண்டுகளாக பசு தொழுவத்தில் லக்ஷ்மி வசிப்பதாக கூறுவதை முட்டாள் தனம் என்றும் நாகரீகமற்ற பேச்சு என்றும் கூறி கொண்டு இருந்தவர்களும் இதை கண்டு ஆச்சர்யப்பட்டனர்.
பசு கோமியத்தின் மீது திரு. ராஜூ பாய் செய்த வாதம்:
ஒரு பசுவானது ஒரு நாளைக்கு 2 முதல் 2.25 லிட்டர் கோமியம் வழங்கும் என்றும் இவை பலவிதமான நோய்களான வாதம், மதுமோகம், மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் என சுமார் 48 நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது என உறுதியாகி இதன் மூலம் பல ஆயுர்வேத மருந்துகள் தயார் செய்யபடுகிறது.
ஒரு லிட்டர் பசு கோமியமானது இந்திய சந்தையில் ரூ.500/-ஆகும்.
உலக சந்தையில் இதன் மதிப்பு மேலும் அதிகமாகும்.
இது அமெரிக்க நாட்டில் பாட்டேர்ன் (pattern) செய்யப்பட்டுள்ளது.
பசு கோமியத்திற்கு 3 பாட்டேர்ன்கள் உள்ளது.
அமெரிக்கா இந்தியாவிலிருந்து பசு கோமியத்தை இறக்குமதி செய்து கொண்டு அவர்கள் நாட்டில் கேன்சர் மற்றும் பல நோய்களுக்கு மருந்து தயாரித்து வருகிறது.
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் கோமியத்தின் தற்போதைய விலையானது ரூ.1200 முதல் ரூ.1300/-வரையாகும்.
இந்த கணக்கின் படி இந்த கோமியத்தின் ஒரு நாள் வருமானமானது ரூ.3000/- அப்படியானால் ஒரு ஆண்டுக்கு சுமார் (3000x365) = ரூ.10,95,000/- எனவே ஒரு பசு தனது ஆயுள் காலத்தில் தனது கோமியத்தின் மூலம் தரக்கூடிய வருமானமானது (3000*365*20) = ரூ.2,19,00,000/-.
இந்த பசு கோமியத்தின் மூலமாக மீத்தேன் வாயு உற்பத்தி செய்யப்படுகிறது.
இதனை நாம் சமையலறை, வாகனங்கள், கார்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த வாதத்தை நீதிபதிகளின் அமர்வில் ஒரு நீதிபதி நம்ப மறுத்தார்.
உடனே திரு. ராஜூ பாய் அவர்கள் நீங்கள் அனுமதித்தால் உங்கள் காருக்கு நான் மீத்தேன் வாயுவை நிரப்புகிறேன்.
பின்பு அதை நீங்கள் சோதித்து கொள்ளலாம் என்று கூறினார்.
அதற்கு நீதிபதி ஒப்புக் கொண்டு தனது காருக்கு 3 மாதங்கள் மீத்தேன் வாயுவை செலுத்தி நடத்தினார்.
அப்போது 1 கிலோ மீட்டருக்கு ரூ. 50/- காசு முதல் ரூ.60/-காசு வரை செலவானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதற்கு முன் இவர் ரூ.400/-டீசலுக்கு செலவு செய்தார்.
மேலும் டீசல் போல இதில் புகையோ, இரைச்சலோ, சுற்றுப்புற சூழல் பாதிப்போ, இதில் இல்லை.
எனவே நீதிபதி முழு திருப்தியடைந்து ராஜூ பாய் அவர்களின் வாதத்தை ஒப்புக்கொண்டார்.
ஒரு நாளைக்கு 10 கிலோ பசு சாணத்தால் எவ்வளவு மீத்தேன் தயாரிக்க முடியுமென்றும் அது 20 வருடத்திற்கு இந்த நாட்டிற்கு எவ்வளவு வருமானத்தை தருமென்றும் கணக்கிட்டு சமர்ப்பித்தார்.
இதன்படி நம் நாட்டிலுள்ள 17 கோடி பசுகளால் சுமார் 1,32,000/- கோடி பணம் ஈட்ட முடியும் என்று நிரூபித்தார்.
நமது பயணம் முழுவதும் மீத்தேன் வாயுவையே ஆதாரப்பட்டிருந்தால் நாம் அரபு நாடுகளிலிருந்து பெட்ரோல், டீசல் வாயுவை இறக்குமதி செய்ய தேவையில்லை.
இதேபோல் வெளிநாட்டிற்கு நமது செல்வத்தை செலவு செய்ய தேவையில்லை.
உலக அளவில் நம் ரூபாயின் மதிப்பு கூடும், இது பசுவின் மூலமே சாத்தியமாகும்.
இந்த வாதத்தை கேட்ட உச்சநீதிமன்றம் அதிர்ச்சியடைந்து
திரு. ராஜூ பாய் சமர்ப்பித்த கணக்கில் அனைத்தையும் துல்லியமாக பரிசீலித்து அவரின் வாதத்தில் உள்ள உண்மையை அறிந்து கொண்டு பசு பாதுகாப்பின் மூலமாக நம் இந்திய நாட்டிற்கு பொருளாதார ரீதியான வளர்ச்சி கிடைக்குமென்று உறுதி செய்தது.
இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்மானித்தவுடன் பசு வதை செய்பவர்கள் சார்பாக பசு மாமிசம் சாப்பிடுவது இஸ்லாம் மதரீதியான உரிமை என்று வாதிட்டனர்.
இதற்கு பதிலளித்த திரு. ராஜூபாய் அவர்கள் அப்படியானால் எத்தனை இஸ்லாம் மன்னர்கள் இந்த மதரீதியான உரிமையை பயன்படுத்த சொன்னார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவ்வாறு சொல்லக்கூடிய இஸ்லாம் நூல்கள் எவை என்பதை கூறும்படி கேள்வி எழுப்பி இந்த கேள்விகளை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டுமென்றும் கேட்டு கொண்டார்.
அப்பொழுது உச்சநீதிமன்றம் இந்த அம்சங்களை பரிசீலிப்பதற்காக ஒரு விசாரணை குழுவை நியமித்தனர்.
இந்த கமிட்டியானது அனைத்து அம்சங்களையும் மிகவும் துல்லியமாக பரிசீலித்து இஸ்லாம் மன்னர்கள் மற்றும் நாட்டை ஆண்ட இஸ்லாமியர்கள், இஸ்லாம் மத நூல்கள், பசு மாமிசத்தை சாப்பிடுவது பற்றி என்ன கூறுகிறது என்பது பற்றியும் இப்படி ஒரு உரிமை உள்ளதா, இல்லையா என்பதை பற்றியும் கண்டு பிடிக்கவும் இந்த கமிட்டிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த கமிட்டி வரலாற்று ரீதியான ஆவணங்களையும் மத நூல்களையும் பரிசீலித்து கொடுத்த முடிவுரையாவது:
நாட்டை ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் யாரும் பசு வதையை ஆதரிக்க வில்லை என்றும்,
ஒரு சில இஸ்லாமிய மன்னர்கள் பசு வதைக்கு எதிராக சட்டங்களை இயற்றினார்கள் என்றும் அவர்களில் முதன்மையானவர் பாபர் என்றும் அவர் தன்னுடைய பாபர் நாமாவில் பசு வதை தவறு என்றும் அத்தகைய குற்றத்தை இந்த நாட்டில் தான் இறந்த பிறகும் நடக்கக்கூடாது என்றும்,
தான் ஏற்படுத்திய பசு வதை தடுப்பு சட்டம் நடைபெறவேண்டும் என்றும் எழுதி வைத்து, அவருடைய சந்ததி அனைவரும் இதனை நடைமுறைப் படுத்த வேண்டும் எனவும் கூறி உள்ளார் மற்றும் மன்னர் ஹூமாயூனும் அதே சட்டத்தை நிலைநாட்டினார்கள்.
அதன் பிறகு வந்த ஹிந்து சம்பிரதாயங்களை கொடூரமான முறையில் அடக்கி உடைக்கி அனைத்து விட்ட ஔரங்க சீப் அவர்கள் கூட பசு வதையை எதிர்த்து அவரது முன்னோர்கள் ஏற்படுத்திய சட்டத்தை வழி நடத்தினார்.
அதே போல் தென்னிந்தியாவை ஆண்ட திப்பு சுல்தான் அவர்களின் தந்தை ஹைதரலி அவர்கள் பசுவதை செய்வோரை கண்டால் அவர்கள் தலையை துண்டிக்கும் படி கூறியதுடன் அத்தகைய செயலில் ஈடுபட்ட பலரை இந்த தண்டனையின் மூலம் பலியிட்டார்.
இதன் பின்பு அவரது மகன் திப்பு சுல்தான் மன்னரான பின்பு இந்த குற்றத்தின் தண்டனையான தலை துண்டிப்பை மாற்றி கைகளை துண்டிக்கும் படி இயற்றினார்.
இவ்வாறு வரலாற்று ஆவணங்களை பரிசீலித்து விசாரணை கமிட்டி அளித்த அறிக்கை திரு. ராஜூ பாய் அவர்கள் வாதத்திற்க்கு வலு சேர்ப்பதாக அமைந்தது.
அவர் தனது வாதத்தில் பசு மாமிசம் சாப்பிடுவது இஸ்லாம் மத உரிமை என பசு வதைக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதிடுபவர்கள் கூறுவது உண்மையென்றால்
இஸ்லாம் மன்னர்களான இந்த நாட்டை ஆண்ட பாபர், ஹூமையுன், மற்றும் ஹவுரங்கசீப் அவர்கள் கூட பசு வதை தடுப்புச் சட்டங்களை ஏன் அமல்படுத்தினர் என்று கேள்வி யெழுப்பினார்.
இதனை தொடர்ந்து திரு. ராஜூ பாய் அவர்கள் தனது இறுதி வாதத்தை முன் வைத்து உச்சநீதிமன்றம் அனுமதியோடு புனிதகுரான், ஹதீத், மற்ற இஸ்லாமிய நூல்கள், அனைத்தும் பசு வதை பற்றி என்ன கூறியுள்ளன என்று பரிசீலிக்க வேண்டுமென கூறினார்.
எந்த இஸ்லாமிய நூல்களும் பசு வதையை ஆதரிக்கவில்லை என்றும், இன்னும் சொல்லப்போனால் ஹத்திதுகள் பசுக்களை காப்பாற்றினால் அவை உங்களை காப்பாற்றும் என்றும் கூறியுள்ளனர், என தெளிவு படுத்தினர்.
மஹத் அவர்கள் பசு என்பது ஒரு பரிதாபத்துக்குரிய பிராணி என்றும் அதன்மீது அனைவரும் பரிதாப உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும் வாதிட்டார்.
திரு. முஹம்மத் அவர்களுடைய புனித வசனங்கள் பசுவை வதை செய்தவர்களுக்கு நரகத்தில் கூட இடமில்லை என்று கூறியுள்ளார்.
இவற்றையெல்லாம் குறிப்பிட்ட திரு. ராஜூ பாய் அவர்கள் தனது வாதத்தை முடிக்கும் நோக்கில்
புனித குரானும், மொஹமத் வசனங்களும், ஹத்தித்குறிப்புகளும், பசு வதையை எதிர்க்கும் போது, பசு வதை எவ்வாறு இஸ்லாம் மத உரிமையாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
இங்கு பசு வதையை ஆதரித்து அது இஸ்லாம் மத உரிமை என்று வாதிடுபவர்கள் தான் குறிப்பிட்ட புனித நூல்கள் எதிலும் அவ்வாறு இல்லாத நிலையில் இவர்கள் எவ்வாறு கூறமுடியும் என்றும்,
இவர்கள் கூறுவதற்கு ஆதரவாக மெக்கா, மற்றும் மதீனாக்களில் வேறு ஏதேனும் நூல்களில் அவ்வாறு பசு வதை செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளதா என்று காட்டும் படி கேட்டார்.
அவ்வாறு எந்த நூலிலும் இல்லையென்றும், இஸ்லாம் மத பெரியவர்களுக்கு ஏன் தெரியவில்லையென்றும் எனக்கு புரியவில்லையென்றும், வாதத்தை முடித்துக் கொண்டார்.
பசு வதைக்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர்களிடம் நீதிமன்ற அமர்வு நீங்கள் வெறும் வாதங்கள் செய்தால் போதாது உங்கள் இஸ்லாம் மத நூல்களில் ஏதாவது குறிப்பிடப்பட்டுள்ளதா என்று கூறும்படி கேட்க அவர்களால் எந்த நூல் குறிப்புகளையும் தர இயலவில்லை.
உச்சநீதிமன்றத்தின் அரசியல் அமர்வு எந்த வழக்கின் மீது 26-10-2005-ல் தீர்ப்பினை வெளியிட்டது.
இந்த தீர்ப்பானது உச்சநீதிமன்றம் வெப்சைட்டில் காணலாம்.
இந்த 66 பக்கங்கள் கொண்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பாக கூறப்படுகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பகிர்வுப் பதிவு

Mahesh Kumar T Mahesh Kumar

முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்"கள்ளச்சிரிப்பு"என்றார்கள்.கோபங் கொண்டேன்"சிடுமூஞ்சி"என்றார்கள்.அதிகம் பேசாமலிருந்தேன்...
20/05/2023

முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்
"கள்ளச்சிரிப்பு"என்றார்கள்.

கோபங் கொண்டேன்
"சிடுமூஞ்சி"என்றார்கள்.

அதிகம் பேசாமலிருந்தேன்.
"ஊமையன்"என்றார்கள்.

சளசளவென்று பேசினேன்...!!
" ஓட்டவாய்" என்றார்கள்.

புதிய தகவல்களை பரிமாறினேன்.
" கருத்து கந்தசாமி"என்றார்கள்.

அவர்கள் வார்த்தைகளுக்கு செவி
சாய்ந்தேன்.
" ஜால்ரா"என்றார்கள்.

எல்லா செயல்களிலும் முன் நின்று செய்தேன்....!!
" முந்திரிக் கொட்டை"என்றார்கள்.

அவர்களைப் பின் தொடர்ந்தேன்.
"நடிப்பு" என்றார்கள்.

யாரைப் பார்த்தாலும் வணங்கினேன்
" ஏமாற்றுக்காரன்" என்றார்கள்.

வணங்குவதை நிறுத்தினேன்.
"தலைக்கனம்" என்றார்கள்.

ஆலோசனை வழங்கினேன்.
"படித்த திமிர்" என்றார்கள்.

சுயமாக முடிவெடித்தேன்.
" அதிபுத்திசாலி"என்றார்கள்.

நான் கண்ணீர் விட்டு அழுததால்.
" வேஷக்காரன்"என்றார்கள்.

நான் சிரித்த போதெல்லாம்
" மறை கழண்டுப் போச்சு"என்றார்கள்.

எதிர் கேள்வி கேட்டால்.
"வில்லங்கம்" என்றார்கள்.

ஒதுங்கி இருந்தால்.
" பயந்தாங்கொள்ளி"என்றார்கள்.

உரிமைக்குப் போராடினால்.
"கலிக்காமர்" என்றார்கள்.

எதற்கும் கலங்காமல் இருந்தால்.
"கல் நெஞ்சன் "என்றார்கள்.

"நாலு பேர் என்ன
நினைப்பார்கள் ...?

"நாலு பேர் என்ன
பேசுவார்கள்....?

யாரோ நாலு பேருக்காக
வாழ்ந்தேன்.....!!

தொலைவில் கிடந்து என்
வாழ்க்கை.....!!

👉 அந்த நாலு பேரை கழற்றி
விட்டு........

👉 என்னை அணிந்து
கொண்டேன்.

துலங்கத் துவங்கியது
எனக்கான வாழ்வின் துளிர்....

வாழ்கிறேன் முழுமையாக.
இன்பமாக.நிம்மதியாக.

Mahesh Kumar T Mahesh Kumar Mahesh Kumar T

*எச்சரிக்கைப்பதிவு*தங்கள் வங்கிக் கணக்கில்  2000 ரூபாய் பணமாகக் கட்டும் போது உங்களது  ஆதார் எண், மொபைல் எண், வீட்டு முகவ...
20/05/2023

*எச்சரிக்கைப்பதிவு*

தங்கள் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் பணமாகக் கட்டும் போது உங்களது ஆதார் எண், மொபைல் எண், வீட்டு முகவரி, பான் எண் ஆகியவற்றின் விவரங்கள் வங்கியில் 'உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள்' (KYC) என்கிற விதியின் படி, வங்கிக் கணினியில் சேமிக்கப்பட்டு இருக்கும்.
அடுத்ததாக, ஒருவர் மாற்றுகிற 2,000 ரூபாய்த் தாளின் கூட்டு மதிப்பு (Cumulative Value) ரூ.50,000-ஐத் தாண்டினாலோ, கணக்கில் செலுத்தும் தொகையின் கூட்டு மதிப்பு ரூ.5 லட்சத்தைத் தாண்டினாலோ, அவர்களுடைய விவரங்கள் வருமானவரித் துறைக்கு வங்கிகளின் கணினி வலைப்பின்னல் வாயிலாகத் தானாகவே போய்ச் சேர்ந்து விடும்.
உடனே களத்தில் இறங்கும் வருமானவரித் துறை அதிகாரிகள், பரிசீலனையில் இருக்கும் நபர்களின் இந்த 20.5.2023 முதல் 30.9.2023 வரை உள்ள வங்கிக் கணக்கில் வந்துள்ள வரவுகளின் கூட்டுத் தொகை (Credit Summation) ஆகியவற்றோடு உங்களது விற்பனை தொகையை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.
அவசியம் ஏற்பட்டால்,

மத்தியப் புலனாய்வு நிறுவனத்துக்கும் (CBI),

மத்திய நிதித்துறையின் பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவுக்கும் (Financial Intelligence Unit) புள்ளிவிவரங்கள் அனுப்பப்பட்டு விடும்.
ஒருவருடைய ஆண்டு வருமானத்துக்கும், வங்கிக் கணக்கில் காணப்படும் மொத்த வரவுக்கும், அவர் 2,000 ரூபாய்த் தாளைக் கொண்டு வங்கிகளில் செய்த பரிவர்த்தனைகளுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருந்தால், அவர் தீவிர விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்.
பல்முனை விசாரணைகளில் கேட்கப்படும் வினாக்களுக்கு அவருடைய பதில்கள் திருப்திகரமாக இல்லாமல் போனால், அவரிடம் இருந்து பன்மடங்கு அபராதத் தொகை, அதற்கான வட்டி ஆகியவை வசூலிக்கப்படும்.
தவிரவும், அவர் கட்டிய பணம் வந்த வழிக்கான (Source of Income) திருப்திகரமான விளக்கம் அவர் தரவேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், கருப்புப் பணத்தை வெளுப்பாக்குவதற்கான தடைச் சட்டம் (Prevention of Money Laundering Act) பாயும். இதன் விதிகளும், அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனையும் கடுமையானவை. அவற்றில் இருந்து எளிதில் தப்பிக்க இயலாதவை.
ஆகவே
*இன்னொருவர் தரும் 2,000 ரூபாய்த் தாள்களை நீங்கள் வாங்கி மாற்றவோ, உங்கள் வங்கிக் கணக்கில் கட்டவோ வேண்டாம்*

 #ஊஞ்சல்.முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்...
18/05/2023

#ஊஞ்சல்.

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.

1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.

2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது

4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.

5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.

6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

8. சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். (This is the reason, when we travel in train, whatever food we have during the journey, is completely digested without any health troubles. Hope many could have experienced this in their life journey)

9. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.

10. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை(நம்பிக்கை மட்டுமே). சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

மகாபாரதம்_சொல்லும்_பாடம்மோகத்தில் வீழ்ந்துவிட்டால்மொத்தமாய் வீழ்ந்திடுவாய் #சாந்தனுவாய்....சத்தியம் செய்துவிட்டால் சங்கட...
15/03/2023

மகாபாரதம்_சொல்லும்_பாடம்

மோகத்தில் வீழ்ந்துவிட்டால்
மொத்தமாய் வீழ்ந்திடுவாய்
#சாந்தனுவாய்....

சத்தியம் செய்துவிட்டால்
சங்கடத்தில் மாட்டிடுவாய்
#கங்கை_மைந்தானாய்..

முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்
#பாண்டுவாய்....

வஞ்சனை நெஞ்சில் கொண்டால்
வாழ்வனைத்தும் வீணாகும்
#சகுனியாய்...

ஒவ்வொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு
#குந்தியாய்...

குரோதம் கொண்டால்
விரோதம் பிறக்கும்
#திருதராஷ்டிரனாய்....

பெற்றோர் திரையிட்டால்
பிள்ளைகள் தறிகெடுவார்கள்
#கௌரவர்கள்...

பேராசை உண்டாக்கும்
பெரும் அழிவினையே
#துரியோதனனாய்...

கூடா நட்பு
கேடாய் முடியும்
#கர்ணனாய்...

சொல்லும் வார்த்தை
கொல்லும் ஓர்நாள்
#பாஞ்சாலியாய்..

பலம் மட்டுமே
பலன் தராது
#பீமனாய்....

இருப்பவர் இருந்தால்
கிடைப்பதெல்லாம் வெற்றியே
#அர்ஜூனனாய்....

சாஸ்திரம் அறிந்தாலும்
சமயத்தில் உதவாது
#சகாதேவனாய்..

விவேகமில்லா வேகம்
வெற்றியை ஈட்டாது
#அபிமன்யூ

நிதர்சனம் உணர்ந்தவன்
நெஞ்சம் கலங்கிடான்
#கண்ணனாய்....

பெண்ணை வைத்து பந்தயம் செய்தால்
மன்னனே ஆனாலும் மண்ணாய் போவான்
#தர்மனேஆனாலும்_கருமம் காண்பான்

வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்....
வாழ்ந்திடலாம் பகுத்தறிந்து..

Mahesh Kumar Mahesh Kumar T

நாளை 22.10.2022ஸ்ரீ தன்வந்திரி  ஜெயந்தி..********************************திருமால் மருத்துவராக தோன்றிய நாளே தன்வந்திரி ஜெ...
21/10/2022

நாளை 22.10.2022
ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி..
********************************
திருமால் மருத்துவராக தோன்றிய நாளே தன்வந்திரி ஜெயந்தி யாகும்.நோய் வராமல் நல்ல உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்க தன்வந்திரி வழிபாடு செய்ய ப்படுகிறது.

ஸ்ரீ தன்வந்திரி விஷ்ணு அம்சமாக பின்னி ரு கரங்களில் சங்கு,சக்கரத்துடனும் முன் வலக்கையில் அட்டைப்பூச்சியை ஏந்தியும், இடக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி அளிக்கிறார்.

அக்கால மருத்துவமுறையில் நோயாளியி ன் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ் சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப்பூ ச்சிகள் பயன்படுத்தப்பட்டனவாம்.

திருமாலின் 24அவதாரங்களில் 17ஆவது அவதாரம் தன்வந்திரி அவதாரமாகும். இந் து மதத்தில் தன்வந்திரி உடல் நலத்திற்கா க வழி படக்கூடிய கடவுள் ஆவார். தன்வந் திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் கூறலாம்.

தன்வந்திரி அவதாரம்
**************************
அசுரர்கள் எப்போதும் தேவர்களை துன்பப் படு த்தும் சுபாவம் கொண்டவர்கள். தேவர் களது வாழ்வு தங்களுக்கு கிடைக்க வேண் டும் என்று அசுரர்கள் தேவர்களுடன் சண் டை இடுவது உண்டு. தேவர்களைவிட அசு ரர்கள் பலசாலிகள்.

அசுரர்களிடம் இருந்து தங்களை பாதுகாக் கு மாறு தேவர்கள் மூம்மூர்த்திகளிடம் சர ணடை ந்தனர்.சாகாவரம் கொண்ட அமிர் தத்தை உண்டால் என்றும் சாவு கிடையா து. அமிர்தத்தை பெற பாற்கடலை தேவர் கள் அசுரர்களின் உதவியுடன் கடைந்தனர்

பாற்கடலை கடையும்போது ஆலகால விஷ ம் வந்தது. அதை சிவபெருமான் எடுத்து கொண்டதால் ,அதனை அடுத்து காமதேனு, கற்பக விருட்சம், ஐராவதம், மூதேவி, மகால க்ஷ்மி தோன்றினர்.

கடைசியாக அமிர்தத்துடன் விஷ்ணுவின் அவதாரமான தன்வந்திரி தோன்றினார். இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலி ருந்து வழங்கிய அமிர்தத்தை தேவர்கள் உண்டதால் சாவாவரம் பெற்றனர்.

"ஹிமா"என்ற அரசனுக்கு திருமணமான நான் காவது நாள் பாம்பு கடித்து இறக்க நேரிடும் என்ற சாபம் இருந்தது.

இதை அறிந்த அவள் மனைவி அந்த நாள் (தன் திரேயாஸ்) இரவில் கணவனைச் சுற்றிலும் ஏராளமான விளக்கு ஏற்றி, நடு வே ஆபரணங்களையும் வைத்து கணவ னுக்கு புராணக் கதை கூறி தூங்காது பார்த்து கொண்டாளாம்.

பாம்பு உருவத்தில் வந்த எமன் தீப எண் ணெயில் ஆபரணங்களி ன் பிரகாசத்தில் கூசவே,காலைவரை காத்திரு ந்துவிட்டு திரும்பி சென்றதாகவும்,மனைவி யமனிட ம் இருந்து காப்பாற்றியதாகவும் கருக் கதை உள்ளது.

தன்வந்திரி நாளன்று தன்னை சுற்றிலும் தீபங்கள் ஏற்றி தன் மனைவி காப்பாற்றி யது தன்வந்திரி கடவுளே காரணம் என மன்னன் நம்பினான். மக்கள் அனைவரை யும் தன்திரே யாஸ் தினத்தன்று, இரவில் யமதீபம் ஏற்றி வழிபடவேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஐப்பசி மாத அமாவாசை 2 நாட்களுக்கு முன்பாக வரும் திரியோதசி நாளன்று தீபாவளி திருநாள் துவங்கி விடுகிறது. அன்று தன்வந்திரி ஜெயந்தி தன்திரேயா ஸ் என்றும் சொல்வர்.

தன்வந்திரி மந்திரம்...
**************************
ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே

அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய

த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப

ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயணாய நமஸ்தே.’

விளக்கம்:
ஸ்ரீ மஹாசுதர்சனராகவும், வாசுதேவராக வும் விளங்குபவரும்; அமிர்த கலசத்தைக் கரங்க ளில் ஏந்தி, அனைத்து பயங்களை போக்கு பவரும்; எல்லா நோய்களுக்கும் நிவாரணம் அளிப்பவரும்; மூன்று உலக ங் களுக்குத் தலைவராக விளங்குபவரும்; அனைத்துச் செல்வங்களுக்கும் அதிபதி யாக விளங்குப வருமான ஸ்ரீ மகாவிஷ் ணு ஸ்வரூபியான ஸ்ரீ ஔஷத (மருந்து) சக்ர நாராயணரான ஸ்ரீ தன்வந்திரிப் பெருமானை வணங்குகிறேன்.

மந்திரங்களுக்கு சக்தியும்,பலமும் அளவி ட முடியாது. தன்வந்திரி ஜெயந்தியன்று கோது மை மாவும்,வெல்லமும் சேர்த்து தயாரித்த பிரசாதத்தை நெய்வேத்தியம் படைக்கலாம். தன்வந்திரி போற்றி சொல் லி நோய்களிலிரு ந்து விடுபடலாம்.

ஸ்ரீ தன்வந்திரி பெருமானை வணங்குகிறேன்..

21.10.2022.. நேசமுடன் விஜயராகவன்...

பழனி மலையின் அழகிய தோற்றம் வையாபுரிகுளத்தில் பிரதிபலிக்கும் வேல் வடிவு காட்சி.
18/10/2022

பழனி மலையின் அழகிய தோற்றம் வையாபுரிகுளத்தில் பிரதிபலிக்கும் வேல் வடிவு காட்சி.

 #சிவன்மலை  #ஆண்டவன்_உத்தரவு #சித்தன்_வாக்கு  #சிவன்_வாக்கு🙏இன்று 6 10 2022 சிவன்மலை ஆண்டவர் உத்தரவு🙏 உத்தரவு பெட்டியில்...
06/10/2022

#சிவன்மலை #ஆண்டவன்_உத்தரவு
#சித்தன்_வாக்கு #சிவன்_வாக்கு

🙏இன்று 6 10 2022 சிவன்மலை ஆண்டவர் உத்தரவு🙏 உத்தரவு பெட்டியில் வேல் வைத்து பூஜை 🙏 கந்தன் பாதம் கனவிலும் காக்கும் 🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏

கர்மாவின் 9 விதிகள்
02/10/2022

கர்மாவின் 9 விதிகள்

When you have an attitude 😂
02/10/2022

When you have an attitude 😂

24/09/2022
 #குருவே_சரணம்
19/09/2022

#குருவே_சரணம்

 #பணம்*சமீபத்தில் தன், 62வது வயதில் காலமான, பல நுாறாயிரம் கோடிக்கு சொந்தமான, பங்குச் சந்தை நிபுணர் ராகேஷ் ஜுன்ஜுன் வாலா ...
07/09/2022

#பணம்

*சமீபத்தில் தன், 62வது வயதில் காலமான, பல நுாறாயிரம் கோடிக்கு சொந்தமான, பங்குச் சந்தை நிபுணர் ராகேஷ் ஜுன்ஜுன் வாலா இறப்பதற்கு முன், நிகழ்ச்சி ஒன்றில் ஆற்றிய பணம் பற்றிய சொற்பொழிவு:*

'பணம் தான் எல்லாம் என்பதே' வாழ்க்கை நமக்கு முகத்தில் அறைந்து கற்றுக் கொடுக்கும் பாடம். பணத்தை சிலர் நேசிக்கின்றனர்; அதற்காக, சிலர் உயிரையும் கொடுக்க தயாராக இருக்கின்றனர்.சிலர் அதை நன்கு பயன்படுத்துகின்றனர்; சிலர் வீணடிக்கின்றனர்: சிலர் அதற்காக சண்டை போடுகின்றனர்; சிலர் வெறுமனே ஆசைப்படுகின்றனர்.முதல் மில்லியனை சம்பாதிப்பது கடினம்; இரண்டாவது மில்லியனுக்கு அத்தனை கஷ்டம் இருக்காது; மூன்றாவது மில்லியனை சம்பாதிப்பது அதைவிட சுலபம். இத்தனை ஆண்டுகளில், இவ்வளவு சம்பாதித்து நான் உணர்ந்த உண்மை... எவ்வளவு பணம் நிறைவு தரும் என்பதற்கு, முடிவான கணக்கு எதுவும் கிடையாது. பணம் உங்களுக்கு ஐந்து கோடி நன்மைகளை தரலாம். கெட்ட விஷயம் என்னவெனில், நீங்கள் போகும் போது, அதை எடுத்துப் போக முடியாது.என்னையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்... தினமும், 25 சிகரெட் பிடிக்கிறேன்; ஆறு, 'பெக்' விஸ்கி குடிக்கிறேன். உடற்பயிற்சி எதுவும் செய்வதில்லை; ஒரு பன்றி போல சாப்பிடுகிறேன். பணத்தை அனுபவிக்க, ஓர் எல்லை இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக இரவும், பகலும் உழைத்து சம்பாதித்த பணம், இதற்கு மேல் எனக்கு எதையும் செய்யாது. என் பிள்ளைகளுக்கும், ஓர் அளவுக்கு மேல் இது உதவாது.பணம் தலைமுறைகளை தாண்டி, நாடுகளை தாண்டி, கலாசாரங்களை தாண்டி, மதத்தை தாண்டி நிலைத்திருக்கும் விஷயம். வாழ்வில் பணத்துக்கு அர்த்தம் உண்டு. அது, உங்களுக்கு பொறுப்புணர்வையும் கூடுதலாக கொடுக்கிறது.பணத்தை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியம் இல்லை. *ஆனால், பணம் உங்களை என்ன செய்கிறது என்பது ரொம்ப முக்கியம். உங்களுக்குள் இருக்கும் மனித இயல்புகளை, அது மாற்றி விடாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். உங்கள் குடும்பத்தை, நண்பர்களை, இளமைக்காலம் முதல் உங்களுடன் இணைந்து இருப்பவர்களை, நீங்கள் நடத்தும் விதத்தை, உங்களிடம் சேரும் பணம் மாற்றி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.*

இன்று ஸ்ரீ வாமன ஜெயந்திஸ்ரீ திரிவிக்கிரம பெருமாள் திருக்கோயில்ஆந்திர பிரதேசம்.அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றிசென்றங்...
07/09/2022

இன்று ஸ்ரீ வாமன ஜெயந்தி
ஸ்ரீ திரிவிக்கிரம பெருமாள் திருக்கோயில்
ஆந்திர பிரதேசம்.
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி

கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி

குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி

என்றுஎன்றுஉன் சேவகமே ஏத்திப் பறை கொள்வாய்

இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

18/08/2022

🐕OM SRI KALA BHAIRAVA 🐕
TOMORROW BHAIRAVA ASTAMI
Theipirai astami is on 19-8-2022, Friday, (Aavani masam 3, velli Theipirai, Saptami).
( FIXED OF ENEMY)
Fasting or vege food 🥦🍒
Ghee lamp(for money)🪔💵
neem oil (for remove evil eyes) 🌿👹
poosanikai lamp (remove black magic) 🍈🐈‍⬛
coconut lamp (job and healthy) 🥥⛑️
lime lamp (for marriage)🍋 💍
**lamp all must put at temple
don't put all vegetables for lamp
don't make temple like market and
don't waste your money
don't follow all say gurukal or poosari**
pongal or tamarind rice
flower or vilvai malai
bhairava gayathri mantras(11,108 or 1008 times)
Om Soola Hastaya Vidmahe
Swana Vahanaya Dheemahi
Tanno Bhairava Prachodayat
Let Me mediate on the God who has spear in his hand,
God, Who has dog as his vahana, give me higher intellect
Let Lord Bhairava Illuminate my mind.
பைரவ காயத்ரி
ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்:
ashtami day must donate
offer food poor family or animal
(note.📵 no need take pictures for posted at social media because all rdy have ur story with BHAIRAVA)

03/08/2022
 # #பாவம் மற்றும் புண்ணியம் இவற்றிற்கு இடையில் உள்ள கர்ம தொடர்பு என்ன # # இதில் எவை கர்மாவை குறிக்கும் ..🔥புண்ணியம் என்ப...
02/08/2022

# #பாவம் மற்றும் புண்ணியம் இவற்றிற்கு இடையில் உள்ள கர்ம தொடர்பு என்ன # #
இதில் எவை கர்மாவை குறிக்கும் ..

🔥புண்ணியம் என்பது கடந்த கால நிகழ்வுகளின் மூலம் நாம் அனுபவிக்கும் சந்தோஷம் மிக்க செயல்கள் ..
கடந்த காலம் என இங்கே குறிப்பிடுவது கடந்த பிறவிகள் ..

🔥உதாரணமாக, நாம் செய்யும் புண்ணியம் என்பதை (நல்ல செயல்களாக நல் கர்மாவாக எடுத்துக் கொள்ளலாம் .)
Debit card போல, இதில் முதலில் நம்முடைய பணத்தை செலுத்தி விட்டு பிறகு அந்த debit card மூலம் அனுபவிக்கலாம் ..

🔥தீய கர்மவினைகள் அல்லது நாம் சந்திக்கும் தகாத அல்லது மனதிற்கு ஒவ்வாத செயல்கள் அனைத்துமே பாவ கர்ம வினைகள் உடன் தொடர்பு பெற்றவை.

🔥Credit card-- முதலில் அனைத்தையும் அனுபவித்துவிட்டு பிறகு அதற்கான பலனை (bill)செலுத்துவது ..

🔥Debit card என இங்கே குறிப்பிடுவது நம்முடைய நல்ல செயல்களின் பிரதி பலிப்பு. (புண்ணியங்கள்)

🔥Credit card என இங்கே குறிப்பிடுவது, நாம் தேவையற்ற செயல்களை செய்து விட்டு பிறகு அதற்காக வருத்தப்படும் நிகழ்வுகள்.

🔥குரு கடந்தகால புண்ணிய பலன்களை அனுபவிக்க உதவும், அதாவது debit card pin (கடவுச்சொல்) என்பசந்திப்போம்த்து உயிர்களின் புண்ணியச் செயல்களை அனுபவிக்க உதவுகிறது அல்லது வழிகாட்டுகிறது. (Free will)

🔥ராகு என்னும் மாயாவி மனோகாரகன் என்று உடைய இன்னொரு மாயக்காரன் உடன் இணைந்து (சந்திரன்) மீண்டும் மீண்டும் பாவங்களையும் கர்ம வினைகளுக்கு மனிதனை சிக்க வைக்க முயற்சிக்கிறார்கள் ..

🔥சனி, எந்த விதத்திலும் ஒரு துளி கூட குறையாமல் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நீதிமானாக இருந்து பலன்களை வழங்குகிறார் ..

🔥கர்ம கணக்காளர் கேது ,குருவின் தன்மைக்கு ஏற்ப அதாவது ஒவ்வொருவரும் செய்யக்கூடிய நல் கர்ம வினைக்கு ஏற்பவே ஞானமும், அவதியும் ,என்பதை சொல்கிறார் ..

⚡கேது காயத்ரி மந்திரம் ..

⚡ஓம் அஸ்வத்வஜயா வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னக் கேதுஹ் ப்ரசோதயாத்..

🔥ஒவ்வொருவரும், debit card எனப்படும் நல்ல கர்மவினைகளை சேர்த்துக்கொண்டு புண்ணிய பலன்களை அனுபவிக்கும் வழியை நோக்கி பயணிப்போம் ..

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் சண்டி தேவி ..

Address

9/24-A, Jeeva Street, Urumandam Palayam, G. N. Mills Post
Coimbatore
641029

Alerts

Be the first to know and let us send you an email when Mahesh Kumar T posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahesh Kumar T:

Videos

Share

Category


Other Urban Farms in Coimbatore

Show All